dob

File FIR without going to police station
காவல் நிலையம் போகாமலே புகார் பதிவு செய்யும் வசதி! விரைவில் நாடு முழுவதும் அறிமுகம்

காவல் நிலையம் போகாமலே பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி நாடு முழுவதிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. குவஹாத்தியில் நடந்த மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் உளவு அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அசாம் தலைநகர் குவஹாத்தியில் மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏடிஎம் பாணியில், எப்..ஆர் பதிவு மையங்களை ஆங்காங்கு நிறுவுவதுதான் அந்த முடிவு,

இந்த வகை மெஷின்கள், தேசிய வங்கிகளின் கிளைகள் அமைந்துள்ள இடங்களில் வைக்கப்படும். புகார் தெரிவிக்க காவல் நிலையம் செல்லாமல், இந்த வகை மெஷின்களின் மூலமாக புகாரை பதிவு செய்ய முடியும். இதனால் போலீசாருடன் ஏற்படும் மோதல், தேவையற்ற காலவிரையம், 'பணச்செலவு' போன்றவை தவிர்க்கப்படும்.

இந்த வகை மெஷின்கள் ICLICK என்று அழைக்கப்படும். புகாரை பதிவு செய்தவுடன் அதற்கான ரசீதும் புகார்தாரர்கள் கைகளுக்கு கிடைத்துவிடும். இதைக் கொண்டு, புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் நிலையை தெரிந்துகொள்ள முடியும். புகார் பதிவானதும் மேலதிகாரிகளுக்கும் அது குறித்த தகவல் சென்றுவிடும் என்பதால், கீழ்மட்டத்திலுள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காவிட்டாலும் அதுகுறித்து மேலதிகாரிகளால் கேள்வி எழுப்ப வசதியாக இருக்கும்.



ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் இதுபோன்ற ஒரு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. தலைநகர் புவனேஸ்வரில் புகார் மெஷின்கள் உள்ளன. ஆனால் பெண்களுக்கு எதிரான புகார்களை மட்டுமே அங்கு பதிவு செய்ய முடியும். அதே நேரம், பெங்களூருவில் கடந்த மாதம் முதல் புகார் மெஷின் வசதி அறிமுகமாகியுள்ளது. அங்கு அனைத்து வகையான புகார்களையும் பதிவு செய்ய முடிகிறது. பெங்களூரு பாணியில்தான் நாடு முழுவதிலும் புகார் மெஷின்கள் வைக்கப்பட திட்டமிட்டுள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே ஆலோசனை கூட்டத்தில் இன்று பங்கேற்க உள்ள பிரதமர் மோடியிடம் புகார் மெஷின் குறித்து விளக்கி அவரது ஒப்புதலை பெற உள்துறை அமைச்சக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.



No exemption likely for babus from filing family's assets info

Central government employees have to file assets details by December 31
 
The Centre is unlikely to exempt government employees from filing the details of their assets and liabilities along with that of their spouses and dependent children as mandated under the Lokpal Act. 

As per the rules notified under the Lokpal and Lokayuktas Act, every public servant shall file declaration, information and annual returns pertaining to assets and liabilities. 

Senior officials in the Department of Personnel and Training (DoPT) said the government has received some representations from bureaucrats, especially women, expressing apprehensions over putting up the details of assets owned by their spouses and dependent children. 

"The government is unlikely to make any changes in the rules. The details need to be filed before the extended deadline of December 31," a DoPT official said. 

The DoPT had in September notified the Public Servants (Furnishing of Information and Annual Return of Assets and Liabilities and the Limits for Exemption of Assets in Filing Returns) Amendment Rules, 2014, extending the date for the filing of returns to December 31. 

As per the rules, every public servant shall file the returns of his assets and liabilities, including that of his or spouse and dependent family members, on March 31 every year on or before July 31 of that year. 

For the current year, the last date for filing these returns was September 15, which has later extended to December-end. 

The declarations under the Lokpal Act are in addition to similar ones filed by the employees under various services rules. 

All Group A, B and C employees are supposed to file a declaration under the new rules. There are about 22,95,374 employees in these three categories, as per the government's latest data. 

The DoPT has also issued new forms for filing these returns which have fields for mentioning details of cash in hand, bank deposits, investment in bonds, debentures, shares and units in companies or mutual funds, insurance policies, provident fund, personal loans and advance given to any person or entity, among others. 

The employees need to declare motor vehicles, aircraft, yachts or ships, gold and silver jewellery and bullion possessed by them, their spouses and dependent children. 

However, the rules state that the competent authority may exempt a public servant from filing information in respect of any asset if its value does not exceed his or her four months' basic pay or Rs 2 lakh, whichever is higher.


S. Arulselvan
Divisional Secretary,NAPE Gr C
Pattukottai.
சிகரெட்டை இனி பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும்; சில்லரை விற்பனைக்கு வருகிறது தடை!
Government likely to ban sale of loose cigarettes, Rs 20000 fine for smoking in public
The government is considering a proposal to ban the sale of loose cigarettes, a move that will hit ITC and other cigarette makers hard as 70 per cent of retail takes place in this form.
This is one of the many measures proposed by an expert panel set up by the health ministry. Other suggestions include raising the age limit for consumption and increasing the fine for smoking in public spaces to Rs 20,000 from Rs 200, apart from making this a cognizable offence.
பெட்டி கடைகளில், சிகரெட்டை சில்லரையாக விற்பதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட புகையிலை தொடர்பான கடுமையான கொள்கைகளை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல் வெளியானதை தொடர்ந்து பங்குச் சந்தையில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சடசடவென சரிந்தது. 

நாட்டில் புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை குறைப்பதற்கான பரிந்துரைகளை தெரிவிக்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு தற்போது தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. 

அதில், கடைகளில் சிகரெட்டை ஒன்று, இரண்டு என எண்ணிக்கை கணக்கில் சில்லரையாக விற்பதற்கு தடை விதிக்க வேண்டும்; புகையிலை தயாரிப்பு பொருட்களை விற்பதற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது வரம்பை அதிகரிக்க வேண்டும்; சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களுக்கான 2003 ஆண்டு சட்டத்தின் சில விதிகளை மீறுவோருக்கான அபராத தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளை தெரிவிப்பதற்கான வரைவு குறிப்பு அனைத்து துறை அமைச்சகங்களுக்கும் அனுப்பப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நத்தா, மாநிலங்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார். 

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கான மேற்கூறிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டால், அது இந்திய புகையிலை பொருட்கள் தயாரிப்பு துறையில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியர்கள் 100 பில்லியன் சிகரெட்டை புகைத்ததாக ஈரோமானிட்டர் இண்டர்நேஷனல் என்ற அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிக்கிறது. இவ்வாறு விற்கப்பட்ட சிகரெட்டுகளில் பெரும்பாலானவை பெட்டி கடைகளில் சில்லரையாகத்தான் விற்கப்பட்டுள்ளது. 

தற்போது ஒரு பில்டர் சிகரெட்டின் விலை 8 முதல் 10 ரூபாய் அளவுக்கு விற்கப்படும் நிலையில், சிகரெட்புகைக்கும் எண்ணம் தோன்றினால், உடனே 10 ரூபாயை கொடுத்து வாங்கி புகைக்கிறார்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். ஆனால் அதனையே சில்லரையாக விற்கக்கூடாது; பாக்கெட்டாகத்தான் விற்க வேண்டும் என்றால் 10 சிகரெட்டுகள் அடங்கிய பாக்கெட்டை 100 ரூபாய் மொத்தமாக கொடுத்து வாங்க வேண்டும்
ஒரு சில பிராண்ட்  சிகரெட்டுகள் 20 எண்ணிக்கை கொண்ட பாக்கெட்டாகத்தான் விற்கப்படுகிறது. அத்தகைய பிராண்ட் சிகரெட்டுகளை வாங்க வேண்டுமானால் 200 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும். இவ்வாறு மொத்தமாக 100, 200 என விலை கொடுத்து வாங்க பலருக்கு இயலாது. சிலர் அந்த அளவுக்கு கொடுத்து சிகரெட் வாங்க வேண்டுமா என யோசித்து சிகரெட் புகைக்கும் எண்ணத்தை கைவிட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற காரணங்களால் சிகரெட் விற்பனையும், சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும். 

அரசும் அதனைத்தான் விரும்புகிறது. ஏனெனில் சமீப காலமாகவே சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவோர்களுக்கு வாய், நுரையீரல் உள்ளிட்ட இடங்களில் புற்று நோய் வருவது அதிகரித்துள்ளது. பொது இடங்களில் புகைபிடித்தால் அபராதம், மெல்லும் புகையிலை விற்பதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்தபோதிலும், அது போதிய பயனளிக்கவில்லை 

இந்நிலையிலேயே மேற்கூறிய பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. புகையிலை பொருட்கள் தயாரிப்பு துறை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 25,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது என்றபோதிலும், அரசு அதனை பொருட்படுத்தவில்லை. 

இதனிடையே புகையிலை பொருட்கள் மீதான அரசின் கடுமையான கொள்கைகள் அமலாகப்போகிறது என்ற தகவல் வெளியானவுடன், மும்பை பங்குச் சந்தையில் இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி-யின் பங்கு மதிப்பு இன்று சுமார் 5 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இதேப்போன்று காட்ஃப்ரே பிலிப்ஸ், கோல்டன் டொபாக்கோ மற்றும் விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் முறையே 5, 6 மற்றும் 3.6 சதவீதம் என வீழ்ச்சியடைந்தது.