dob


மாத சம்பளம் வாங்குவோரின் எதிர்பார்ப்பு புஸ்ஸ்: வருமான வரிச் சலுகையில் மாற்றம் இல்லை

மத்திய அரசின் 2015-2016 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். இதில் மிகவும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படாதது மாதச் சம்பளதாரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. பட்ஜெட் என்றாலே வருமான வரி எவ்வளவு, விலக்கு எவ்வளவு என்பது தான் பெரும்பாலான நடுத்தர, ஊதியம் வாங்கும் குடும்பங்களின் பார்வையாக உள்ளது. அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் மாதச் சம்பளம் வாங்குபவர்களின் வருமானவரியில் எந்தவிதமாற்றமும் இல்லை என்று அறிவித்து அருண்ஜெட்லி ஏமாற்றிவிட்டார்.

·         அரசு ஊழியர்களுக்கு தகுதிக்கேற்ப சம்பள உயர்வு இருக்கும் என தகவல்
·         வெளிநாடுகளில் உள்ள சொத்து விவரங்களை மறைப்பது குற்றம்
·         வெளிநாடுகளில் உள்ள சொத்து விவரங்களை மறைத்தால் 7 ஆண்டு சிறை
·         பினாமிகள் பெயரில் சொத்து சேர்ப்பதை தடுக்க புதிய சட்டம்
·         வரி ஏய்ப்பில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை தண்டனை
·         கருப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் நிலையான வரிக் கொள்கை
·         வணிக நிறுவனங்களுக்கான வரி 30 சதவீததில் இருந்து 25 சதவீதமாக 4 ஆண்டுகளுக்கு  குறைக்கப்படும்
·         கருப்புப் பணத்திற்கெதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்
·         ராணுவத்துறைக்கு 2.47 லட்சம் கோடி ஒதுக்கீடு
·         மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இந்தியாவில் விமானம் தயாரிக்க்க ஏற்பாடு
·         பாதுகாப்பு தளவாட உற்பத்தியை மேம்படுத்த அந்நிய முதலீடு
·         கல்வி, மதிய உணவுத் திட்டத்துக்கு 68,968 கோடி ரூபாய் ஒதுக்கீடு
·         டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி
·         அமிர்தசரஸில் முதுநிலை தோட்டக்கலைக் கல்லூரி நிறுவப்படும்
·         கர்நாடகாவில் ஐ.ஐ.டி நிறுவப்படும்
·         கிராமப்புற இளைஞர்களிடம் வேலைவாய்ப்பு திற்ானை அதிகரிக்க நடவடிக்கை
·         தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை கொண்டு வரப்படும்
·         இளைஞர்களின் பணித் திறனை அதிகரிக்க தேசிய அளவில் இயக்கம்
·         சுற்றுச் சூழலுக்கு ஆதரவாக வாகன தயாரிப்புக்கு ரூ.70 கோடி நிதி ஒடுக்கீடு
·         சுற்றுலா தலங்களில் மாற்று திறனாளிகலுக்கு கூடுதல் வசதி
·         வருகையின் போது  150 நாடுகளுக்கு விசா வழங்கும் திட்டம் விரிவு படுத்தப்படும்
·         பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை அளிக்கிறது
·         வங்கிகளில் தங்கத்தை டெப்பாசிட் செய்து நிதி திரட்டும் புதிய திட்டம் அறிமுகம்
·         மகளீர் பாதுகாப்புக்கான நிபயா திட்டத்துக்கு மேலும் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
·         அசோகச் சக்கரம் பொறித்த தங்க நாணயங்கள் விற்பனைக்கு வெளியிடப்படும்
·         டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள்  பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்
·         தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விதிமுறைகள் மாற்றியமைக்கப்படும்
·         தங்கத்தின் மீதான ஆவண வடிவ முதலீடுகள் ஊக்குவிக்கப்படும்
·         செபி அமைப்புடன் எம்சிஎக்ஸ், எப் எம்சி அமைப்புகள் இணைக்கப்படும்
·         மூத்த குடிமக்கள் நலனுக்காக புதிய நிதி திட்டம் உருவாக்கப்படும்
·         குழந்தைகள் பாதுகாப்பிற்கு 500 கோடி ரூபாய் நிதி
·         குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்திற்கு 1,500 கோடி ரூபாய்  நிதி
·         கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அலகு அடுத்தாண்டு செயல்படும்.
·         சிறுபான்மை இளைஞர்களுக்கு என நயிமஞ்சில் என்ற திட்டம் உருவாக்கப்படும்
·         தொழில் தொடங்க பெற வேண்டிய உரிமங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.
·         100 நாள் வேலை திட்டத்திற்கு 34,699 கோடி ரூபாய்  நிதி ஒதுக்கீடு
·         மென்பொருள் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்க திட்டம்
·         தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய நிறுவங்கள் தொடங்க ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி
·         புதிய தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படும்
·         நேரடி மானியத்துகான திட்டங்கள் விரிவுப்படுத்தப்படும்
·         பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டம் கொண்டுவரப்படும்
·         சாலை ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்
·         அடல் பென்சன் திட்டம் உருவாக்கப்படும், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பலன் கிடைக்கும்
·         ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியத்தில் 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு
·         சிறு, குறு விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் 1,500 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும்
·         தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் தொழில் தொடங்க முத்ரா வங்கி கடன் வழங்கும்
·         ஊரக உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுகீடு செய்யப்படும்.
·         மின்சாரம் தூய்மையான குடிநீருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
·         சிறுதொழில் நிறுவனக்களுக்கு கடன் கிடைக்க முத்ரா வங்கி உருவாக்கப்படும்.
·         விவசாயிகளுக்கு கடன் வழங்க நபார்டு வங்கி 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன்
·         ஒருங்கிணைந்த தேசிய வேளாண் சந்தை உருவாக்கப்படும்
·         தொழில் முனைவோரை ஊக்கமளிக்கும் வகையில் திட்டங்கள் கொண்டுவரப்படும்.
·         சிறு விவசாயிகளுக்கு விவசாயக் கடன் எளிதில் கிடைக்க நிதித் தொகுப்பு ஏற்படுத்தப்படும்
·         அரசு மானியம் ஏழைகளுக்கு மட்டும் சென்றடைய அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும்
·         வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு மானியத்தை கைவிட வேண்டுகோள்
·         அனைத்து கிராமங்களுக்கு தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தப்படும்
·         மத்திய அரசின் இலக்குகள் நாட்டின் 75வது சுதந்திர தினத்துக்குள் எட்டப்படும்
·         சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது அரசின் குறிக்கோள்
·         நிதிப்பற்றாக்குறையை 4.1 சதவீதமாக பராமரிக்க அரசு உறுதி
·         மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்
·         20 ஆயிரம் கிராமங்களுக்கு சூரிய மின்சார வசதி
·         கல்வியின் தரம் உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்
·         ஏழ்மையை அகற்றுவதே அனைத்து திட்டங்களின் நோக்கம்
·         ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு என்பது அரசின் லட்சியம்
·         அடுத்த நிதியாண்டில் வளச்சி 8.5 சதவீதமாக உயரும்
·         இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் 5 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்
·         பணவீக்கம் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது
·         வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பெரும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது
·         உலகிலேயே மிகவேகமாக வளரும் பொருளாதாரம் இந்தியாவுடையது
·         நாட்டின் வளர்சியில் மாநிலங்களின் பங்களிப்பும் இருக்கும்
·         இந்தியாவில் 6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டம்
·         சென்செக்ஸ் 262 புள்ளிகள் உயர்வு, நிஃப்டி 70 புள்ளிகள் உயர்வு