dob

(திண்டுக்கல் ME போட்டாரு பாருங்க My stamp பிராக்கெட்ட...
மற்ற ME க்களும் இதை  follow பண்ணலாமே...) 


ஓட்டுநருக்கு தபால்தலை!

ருவர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்றால், வழக்கமாக ஒரு பிரிவு உபசார விழா நடத்துவார்கள். ஆனால், சமீபத்தில் திண்டுக்கல்லில் நடந்த அந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் கையால், ஓய்வு பெறுபவர் உருவம் பதித்த தபால்தலை வெளியிட்டு, அவரை கௌரவப்படுத்திருக்கிறார்கள். அப்படி என்ன செய்தார் அவர்?

தமிழ்நாடு சமூக நலத் துறையின் திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில், ஓட்டுநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற குழந்தைசாமிக்குத்தான் இந்த மரியாதை. காரணம், இவர் ஓட்டுநராகப் பணிபுரிந்த 23 ஆண்டுகளில், ஒரு விபத்துகூட நடந்தது இல்லையாம்.
சமூக நலத்துறைப் பகுதி கண்காணிப்பாளர் ரமேஷ் பேசும்போது, ''குழந்தை அண்ணனின் 23 ஆண்டு கால அனுபவத்தில், எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடந்தது இல்லை. அப்படிப்பட்ட இவருக்கு, ஓய்வு பெறும்போது நினைவில் எப்போதும்  நிற்பதுபோல ஒரு பரிசு கொடுக்கலாம் என எங்கள் துறை ஊழியர்கள் அனைவரும் ஆசைப்பட்டோம். அவருக்குச் சிறப்பு செய்ய, தலைவர்களுக்கு மட்டுமே வெளியிடும் தபால்தலையை குழந்தை அண்ணனுக்கு வெளியிட்டோம்'' என்றார்.
ஓட்டுநர் குழந்தைசாமியிடம் பேசினோம். ''1983-ம் வருஷம் லைசென்ஸ் எடுத்துட்டு, வேடசந்தூர்ல இருக்குற சமூக நலத்துறை சத்துணவுப் பிரிவுல பியூனா வேலை பார்த்தேன். பிறகு, டிரைவர் பிரமோஷன் கிடைச்சதும், வடமதுரையில டிரைவரா வேலைக்குச் சேர்ந்தேன். நான் ஓட்டுற வண்டியை என்னோட குழந்தை மாதிரி கவனிச்சுக்குவேன். ஆபீஸுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே வந்து, வண்டியைச் சுத்தம் செஞ்ச பிறகு, நான் முதல்ல செக்-அப் பண்றது பிரேக்தான். அடுத்து ஆயில், பேட்டரி, நாலு வீல்லயும் ஏர் செக் பண்ணிட்டு வண்டியை ஒரு ரவுண்டு ஓட்டிப் பார்த்த பின்னாடிதான், அதிகாரிங்களை வண்டியில உட்காரவெப்பேன். வண்டியைத் திரும்ப விடுறப்பவும் இதே மாதிரி செக்கிங் நடக்கும். வண்டியில ஏறி உட்கார்ந்துட்டா, என்னோட முழு கவனமும் வண்டியிலயும், ரோட்டுலயும்தான் இருக்கும். இந்த 23 வருஷ டிரைவர் வாழ்க்கைக்குப் பிறகு, ரிட்டையர் ஆகிற அன்னிக்கு ஆபீஸுக்கு வர ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா, என்கூட வேலை பார்த்தவங்க, அந்தக் கஷ்டமெல்லாம் மறக்கிற மாதிரி ஸ்டாம்பு போட்டது மனசுக்கு நிறைவா இருக்கு!' என்று நெகிழ்ந்தார் குழந்தைசாமி.
நன்றி :மோட்டார் விகடன் 

No comments:

Post a Comment